குளத்தை தூர்வார வேண்டும்

Update: 2026-08-16 07:32 GMT

இறச்சகுளத்தில் பேச்சாங்குளம் குளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குளிப்பதற்கும் விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். குளத்தை முறையாக பராமரிகாததால் செடிகொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும், குளத்தின் கரையில் சிலர் வீட்டு கட்டிட கழிவுகள், குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. எனவே, குளத்தின் கரையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றுவதுடன், குளத்தை தூர்வாரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-காளியப்பன், இறச்சகுளம். 

மேலும் செய்திகள்