விபத்து அபாயம்

Update: 2026-08-16 11:07 GMT

மதுரை நகர் டி.பி.கே. சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு பாலிடெக்னிக்-பெரியார் நிலையம் இடையே உள்ள பாலத்தின் சாலையின் நடுவே கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர்ச்சியாக ஒளிரும் கூம்பு வடிவ தடுப்புகள் அமைக்கப்பட்டது. தற்போது அதில் பல தடுப்புகள் அகற்றப்பட்டு கிடப்பதால் வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் ஆங்காங்கே வளைந்து செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பாலத்தில் அகற்றப்பட்டு கிடக்கும் தடுப்புகளை மீண்டும் அமைப்பார்களா? 


மேலும் செய்திகள்