ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும் பலர் வந்து செல்கிறார்கள். அங்கிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், கலெக்டர் அலுவலகம் எதிரே பஸ் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. மழை, வெயிலில் பயணிகள், மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. கலெக்டர் அலுவலகம் அருகே பஸ் பயணிகள் நிழற்குடை அமைத்துத்தர அதிகாரிகள் முன் வருவார்களா?
-பி.ஜான், ராணிப்பேட்டை.