காவேரிப்பாக்கத்தில் உள்ள சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்யும்போது காவேரிப்பாக்கம்-வேலூர் மார்க்க பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணியர் நிழற்குடையை அகற்றினர். ஆனால், இதுவரை பயணிகள் நிழற்குடையை கட்டவில்லை. பொதுமக்கள், முதியோர், மாணவர்கள், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் நலன் கருதி பயணிகள் நிழற்குடை அமைக்க அரசு மற்றும் தொகுதி எம்.எல்.ஏ., எம்.பி., மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-லோகநாதன், காவேரிப்பாக்கம்.