கோத்தகிரி நகராட்சி கடைவீதி அருகே பொது மயானம் உள்ளது. இந்த மயானம் முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. மேலும் காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகளின் இருப்பிடமாக மாறி வருகிறது. இதனால் அந்த மயானத்தை பயன்படுத்தும் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அந்த மயானத்தை பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.