அரக்கோணம் தாலுகா அலுவலக கழிவறை பகுதி மற்றும் அலுவலக வளாகம் முழுவதும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காணப்படுகிறது. அதில் இருந்து விஷ பூச்சிகள் வெளியேறி அலுவலகத்துக்கு வரும் அவலம் நடக்கிறது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் தாலுகா அலுவலகத்துக்கு வருகிறார்கள். தாலுகா அலுவலகத்தில் வளர்ந்துள்ள செடி, கொடிகள், புதர்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராஜா, அரக்கோணம்.