பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட ஏலமன்னா சோதனைச்சாவடி அருகே பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. ஆனால் அந்த பயணிகள் நிழற்குடை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் பயனற்று காணப்படுகிறது. இதனால் அங்கு வந்து செல்பவர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அந்த பயணிகள் நிழற்குடையை இடித்து அகற்றிவிட்டு, புதிய பயணிகள் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.