தெரு நாய்கள் தொல்லை

Update: 2024-02-25 17:10 GMT

வேலூர் சத்துவாச்சாரி நேதாஜி நகர் பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. அந்த நாய்கள் தெருக்களில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை கடிக்க பாய்கின்றன. நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் நடமாடுவதற்கு அச்சப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தெருக்களில் சுற்றி திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தெரு நாய்கள் தொல்லை-வித்யாதரன், வேலூர்.

மேலும் செய்திகள்