திருப்பத்தூர் தாலுகா கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட செவ்வாத்தூர் ஊராட்சியில் உள்ள ஏரிக்கரையிலும், கரையிலும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து காடுபோல் உள்ளது. தற்போது கோடைக்காலமாக இருப்பதால் ஏரியை தூர்வாரி சீமை கருவேல மரங்களை அகற்றி, கரைகளை பலப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கே.மூர்த்தி, சமூக ஆர்வலர், செவ்வாத்தூர் புதூர்.