பாலாற்றில் மணல் கொள்ளை

Update: 2023-03-22 17:39 GMT

ஆம்பூர் பாலாற்று பகுதிகளில் இரவு பகலாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. மாட்டு வண்டிகளில் மணல் திருடப்பட்டு ஓரிடத்தில் குவித்து வைத்து, அதன்பிறகு மணலை லாரிகளில் ஏற்றி வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. இது குறித்து வருவாய்த்துறையினர் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனவே பாலாற்றில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

-சுரேஷ், ஆம்பூர்.

மேலும் செய்திகள்