ஆம்பூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் பாலாற்றில் இருந்து தினமும் இரவு பகலாக மணல் கொள்ளை நடந்து வருகிறது. இரவில் மாட்டு வண்டிகளில் தான் அதிகமாக மணல் ஏற்றி கடத்தப்படுகிறது. மணல் திருட்டில் ஈடுபட்டு வரும் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் துறையும், வருவாய்த்துறையும் இணைந்து செயல்பட வேண்டும்.
-மோகன்ராஜ், ஆம்பூர்.