அரசு பள்ளி வளாகத்தில் பாறை

Update: 2023-01-29 16:39 GMT

அரசு பள்ளி வளாகத்தில் பாறை

பல்லடம் அருகே கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. பள்ளி வளாகத்துக்குள் நுழைந்ததும் அனைவரையும் வரவேற்கிறது மிகப்பெரிய பாறை. இதனால் மாணவ- மாணவிகளுக்கு ஆபத்து உள்ளதாக பெற்றோர் கருதுகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், குறுகிய இடத்திற்குள் பள்ளி அமைந்துள்ளது. மாணவ-மாணவிகள் இதற்குள்தான் விளையாடுகின்றனர். பள்ளி வளாகத்துக்குள் மிகப்பெரிய பாறை ஒன்று உள்ளது. இதனை நீண்ட காலமாக அகற்ற கோரி பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. பாறையால் மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. எனவே பாறையை உடைத்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அருண், பல்லடம்.

---

மேலும் செய்திகள்