பள்ளத்தால் ஆபத்து

Update: 2022-11-09 11:16 GMT

கலவை பேரூராட்சியில் பஸ் நிலையம் அருகில் கழிவுநீர் கால்வாய்க்கு மேல் சிெமண்டு சிலாப்பு உடைந்து பல மாதங்களாக உள்ளது. இது, 10 ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். சிறிய பள்ளமாக இருந்தது. தற்போது தொடர்ந்து பெரிய அளவில் பள்ளமாக மாறி விட்டது. அந்த வழியாக செல்லும் முதியோர், சிறுவர், சிறுமிகள் தவறி பள்ளத்தில் விழும் அவல நிலை உள்ளது. பஸ் நிலையம் அருகில் அதிக மக்கள் நடமாட்டம் இருக்கும். பெரிய ஆபத்து நடக்கும் முன் பள்ளத்தை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-வேல்முருகன், கலவை. 

மேலும் செய்திகள்