மரக்கன்றுகள் அகற்றம்

Update: 2022-11-20 11:01 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் கலெக்டராக சிவனருள் என்பவர் பணியாற்றியபோது எம்.எல்.ஏ.க்கள் ஏலகிரிமலையில் உள்ள அத்தனாவூர் பகுதியில் கறி குட்டி ஏரி அருகே அரசுக்கு சொந்தமான தரிசு நிலத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். அத்தனாவூர் பகுதியைச் சேர்ந்த சிலர் தரிசு நிலத்தை அபகரிக்கும் நோக்கில் கலெக்டர், எம்.எல்.ஏ.க்கள் நட்டு வைத்த மரக்கன்றுகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் வீடு கட்டுவதற்காக பணிகளை தொடங்கி கற்களை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, மரக்கன்றுகளை அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜேக்கப்மார்டின், ஏலகிரிமலை.

மேலும் செய்திகள்