மழைநீர் வடிகால்வாய் வசதி தேவை

Update: 2023-06-04 13:22 GMT

சந்தவாசலை அடுத்த நாராயணமங்கலம் கிராமத்தில் மழை பெய்தால் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்குகிறது. இதனால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மழை பெய்யும் நேரத்தில் முதியோர், சிறுவர், சிறுமிகள் வழுக்கி விழும் அவலம் நடந்து வருகிறது. மழைநீர் வடி கால்வாய் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களிடம் பல முறை கூறியும் பலன் இல்லை. இனியாவது நடவடிக்கை எடுப்பார்களா?

-மு.மணிகண்டன், நாராயணமங்கலம். 

மேலும் செய்திகள்