அரக்கோணம் ஜோதி நகர் மற்றும் தாலுகா அலுவலகம் உள்ளிட்ட பஸ் நிறுத்த பயணிகள் நிழற்குடைகள் மற்றும் அரசு அலுவலக சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுவரொட்டிகளை அகற்றவும், இனி வரும் காலங்களில் சுவரொட்டிகளை ஒட்டாமல் தடுக்கவும் எச்சரிக்கை வாசகங்களை எழுதி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வரதன், அரக்கோணம்.