சுகாதாரமற்ற கிணறு

Update: 2026-02-15 19:21 GMT

கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி கீச்சலூர் கிராமத்தில் குடிநீர் கிணறு உள்ளது. இந்த கிணற்று நீரை அந்த பகுதி மக்கள் குடிநீருக்காக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் கிணற்றின் மீது முறையாக வலை அமைக்கப்படவில்லை. இதனால் கிணற்றுக்குள் அருகில் உள்ள மரங்களில் இருந்து காய்ந்த இலைகள் விழுந்து கிடக்கின்றன. மேலும் எலி, பறவைகள் தவறி விழுந்து செத்து மிதக்கின்றன. இதனால் சுகாதாரமற்ற அந்த கிணற்று நீரை பயன்படுத்த முடியாத நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். அத்துடன் கிணற்றை சுற்றிலும் கான்கிரீட் தளமும் இல்லை. இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்