பஸ் நிலையத்தில் கடைகள் திறக்கப்படுமா?

Update: 2026-02-15 18:42 GMT

ஆற்காடு பஸ் நிலையத்தில் ஏற்கனவே இருந்த கடைகள் இடிக்கப்பட்டு புதிய கடைகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. முடிக்கப்பட்ட கடைகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவில்லை. இதனால் பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகள் கடைகளை தேடி பஸ் நிலையத்தை விட்டு வெளியே வந்து பொருட்களை வாங்கி சென்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது வெயில் சுட்டெரிப்பதால் பஸ் நிலையத்தில் நிற்க கூட இடம் இல்லை. கட்டி முடிக்கப்பட்ட கடைகளை ஏலம் விட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-சண்முகம், ஆற்காடு. 

மேலும் செய்திகள்