போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2022-11-27 10:32 GMT

குடியாத்தம் காமாட்சியம்மன் பேட்டையில் இருந்து மேல்பட்டி செல்லும் வழியில் சாலையோரம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இரவில் அங்கு வந்து மதுபானத்தை குடித்து விட்டு பாலீத்தின் கவர்களை வீசி எறிகின்றனர். அருகில் கடைகள் திருமண மண்டபங்கள் உள்ளன. அங்கு வருவோருக்கு அச்சமாக உள்ளது. போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டு மதுபானம் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தமிழரசன், குடியாத்தம்.

மேலும் செய்திகள்