பன்றிகள் தொல்லை

Update: 2024-07-28 20:01 GMT

காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள தூய இதய ஆண்டவர் தேவாலயம் அருகே செல்லும் சாலை ஓரம் மர்ம நபர்கள் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொட்டுகின்றனர். இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அங்குப் பன்றிகள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சாலையோரம் குப்பைகளை கொட்டுவதைத் தடுக்கவும், பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்தவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-மாயவன், காட்பாடி. 

மேலும் செய்திகள்