பயணிகள் நிழற்குடை வசதி

Update: 2025-06-08 18:31 GMT

செங்கம் ஒன்றியம் பக்கிரிப்பாளையம் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் நிறுத்தம் உள்ளது. அங்கு பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், நோயாளிகள், வயது முதிர்ந்தவர்கள் வெயில், மழைக்காலத்தில் சிரமப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பக்கிரிப்பாளையம் கிராமத்தில் பயணிகள் நிழற்குடை வசதி அமைக்க வேண்டும்.

-நெ.சங்கர், பக்கிரிப்பாளையம்.

மேலும் செய்திகள்