பயணிகள் நிழற்கூட வசதி தேவை

Update: 2024-04-14 15:08 GMT

நெமிலியை அடுத்த சேந்தமங்கலம் வழியாக காஞ்சீபுரம்-அரக்கோணம் செல்லும் சாலை செல்கிறது. சேந்தமங்கலத்தில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் வேலை, கல்வி, வியாபாரம், சொந்த வேலை என பல்வேறு காரணங்களுக்காக வெளியூர் சென்று வருகின்றனர். சேந்தமங்கலத்தில் பஸ் பயணிகள் நிழற்கூட வசதி இல்லை. மக்கள் சுட்டெரிக்கும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். தற்போது நடந்து வரும் சாலை விரிவாக்கப் பணியோடு சேர்த்து பயணிகள் நிழற்கூட வசதியை ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சசிக்குமார், சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்