நிழற்குடை அமைக்கப்படுமா?

Update: 2026-05-03 10:42 GMT

திருப்பூர் புதிய பஸ் நிலையத்துக்கு தினமும் ஏராளமான பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் அங்கு பயணிகள் கூட்டம் எப்போதும் காணப்படும். பஸ் நிலையம் எதிரே பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு நிழற்குடை இல்லை. இதனால் தற்போது கொளுத்தும் வெயிலில் பஸ்சுக்காக பயணிகள் காத்து நிற்கிறார்கள். இதன்காரணமாக அவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது. எனவே புதிய பஸ் நிலையம் எதிரே பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மதிமாறன், திருப்பூர்.

மேலும் செய்திகள்