நாய்கள் தொல்லை அதிகரிப்பு

Update: 2026-03-08 10:58 GMT

திருப்பூர் மாநகர பகுதியில் நாளுக்குநாள் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வீரபாண்டி, கே.செட்டிப்பாளையம், திருப்பூர்-தாராபுரம் சாலை, அரசு ஆஸ்பத்திரி பகுதி என பல்வேறு பகுதிகளில் ஏராளமான நாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த நாய்கள், இரவு நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை விரட்டுகிறது. இதனால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழ வாய்ப்பு உள்ளது. குறிப்பாக காலை நேரங்களில் நடைபயிற்சி செல்பவர்களை விரட்டுகிறது. இதனால் அவர்கள் அச்சப்படுகிறார்கள். அதேபோல் பெண்கள் மற்றும் குழந்தைகளை விரட்டி கடிக்கிறது. எனவே பேராபத்துகள ஏற்படும் முன், சுற்றித்திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சங்கர்ராஜ், திருப்பூர்,

மேலும் செய்திகள்