பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் மற்றும் வதிஷ்டப்புரம் ஊராட்சிகளில் ஆற்றுப் பாதை ஓரங்களில் நடைபெறும் மணல் கடத்தலால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதோடு பல்வேறு பிரச்சினைகளும் ஏற்பட்டு வருகின்றன. இந்த தொடர் மணல் கடத்தலை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே சட்டவிரோத மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மணல் கடத்தலை தடுக்க வேண்டும்.