அனுமதியின்றி ஒட்டப்படும் போஸ்டர்

Update: 2026-02-09 05:56 GMT

திருப்பூர் மத்திய பஸ் நிலையத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பஸ் நிலைய சுவரில் அனுமதியின்றி சில தனியார் நிறுவனங்கள் தங்களது போஸ்டர்களை ஒட்டி செல்கின்றனர். இதனால் பஸ் நிலைய சுவர் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பல்வேறு தரப்பினர் சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்படும். எனவே மத்திய பஸ் நிலையத்தில் அனுமதியின்றி போஸ்டர் ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாராயணன், வலையங்காடு.

மேலும் செய்திகள்