குமரலிங்கம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் தோல் நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. உடல் முழுவதும் முடி உதிர்ந்து, தோலில் புண்கள், அரிப்பு ஆகியவற்றுடன் பல நாய்கள் சாலையோரங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் காணப்படுகின்றன. அதிகளவில் நாய்கள் தெருக்களில் சுற்றித் திரிவதால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்வோருக்கு விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. குறிப்பாக சில இடங்களில் நாய்கள் குழந்தைகளை துரத்துவதும், பொதுமக்களை கடிப்பதும் போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், தற்போது பெரும்பாலான தெருநாய்கள் நோயால் முழுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தெருக்களில் சுற்றித் திரிவதால், ஏதேனும் தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே, தெருநாய்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை, தடுப்பூசி மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
-இளவரசன், குமரலிங்கம்.