கால்நடை மருத்துவமனையை சீரமைக்க வேண்டும்

Update: 2026-02-01 19:25 GMT

மடத்துக்குளம்-கணியூர் ரோட்டில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டாரப் பகுதி மக்கள் தங்கள் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர். வளர்ப்பு நாய்களுக்கான தடுப்பூசி போடுவதற்கான முகாம்களும் இங்கு நடத்தப்படுகிறது. இந்த கால்நடை மருத்துவமனை நுழைவுவாயில் பகுதியில் சுற்றுச் சுவர் சேதமடைந்த நிலையில் உள்ளது. உடைந்து துண்டாக உள்ள இந்த சுவர், மருத்துவமனைக்கு வருபவர்கள் மற்றும் கால்நடைகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே சேதமடைந்த சுற்றுச் சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், மடத்துக்குளம்.

மேலும் செய்திகள்