திருப்பூரில் தென்மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்கிறார்கள். இதை தவிர குடும்பத்தை சொந்த ஊர்களில் விட்டுவிட்டு, திருப்பூரில் வேலை செய்யும் ஒரு சில தொழிலாளர்கள் வ ாரம் தோறும் சொந்த ஊர் செல்கிறார்கள். அப்படி செல்லும் அவர்களுக்கு திருப்பூரில் இருந்துஇரவு நேர அரசு பஸ் சேவை இல்லை. எனவே திருப்பர் கோவில்வழி பஸ் நிலையத்தில் இருந்து, நெல்லை, தென்னாசி, ராஜபாளையம், செங்கோட்டை பகுதிகளுக்கு நள்ளிரவு 11.30 மணிக்கு பிறகு பஸ் இயக்கினால் அவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என தென்மாவட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.