மதுரை காளவாசலில் இருந்து விளாங்குடி வரை உள்ள சாலையின் இரு புறங்களிலும் மணல் அள்ளப்படாமல் அதிகளவில் குவிந்து கிடக்கின்றன. இதனால் இருச்சக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி படுகாயம் அடையும் அபாயம் உள்ளது. மேலும் இந்த மண் காற்றில் பறந்து சாலையில் செல்லும் பாதசாரிகள் கண்களில் விழுவதால் சிரமமடைகின்றனர். எனவே, சாலையில் குவிந்து கிடக்கும் மண்ணை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.