பூட்டியே கிடக்கும் நூலகம்

Update: 2025-06-29 16:18 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த அத்திமுட்லு ஊராட்சிக்குட்பட்ட அகரம் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நூலக கட்டிடம் புதுப்பிக்கப்பட்டது. இந்த நூலகம் கடந்த சில மாதங்களாக பூட்டியே கிடக்கிறது. இதனால் அரசு தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் விரைந்து நூலகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-மாதையன், தர்மபுரி.

மேலும் செய்திகள்