கோவை மாநகராட்சி 58-வது வார்டு சிங்காநல்லூர் கே.பி.ஆர். லே அவுட் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் சாலையில் நடந்தோ, இருசக்கர வாகனங்களிலோ செல்ல முடியவில்லை. தினந்தோறும் யாராவது ஒருவர் தெருநாய்க்கடிக்கு ஆளாகும் நிலை உள்ளது. எனவே தெருநாய்கள் ெதால்லையை அதிகாரிகள் கட்டுப்படுத்த வேண்டும்.