தர்மபுரி நகரில் சாலைகளிலும், தெருக்களிலும் கூட்டம் கூட்டமாக தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் நடந்து செல்லும் பொதுமக்களை துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும் சாலையின் குறுக்கே அவைகள் ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிலர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. ஒரு சில இடங்களில் தெருநாய்கள் தொல்லையால் வீட்டை விட்டு குழந்தைகள் வெளியே வரவே அச்சப்படுகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பார்களா?
-கார்த்தி, தர்மபுரி.