தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் கொசப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாளையம் போடம்பட்டியில் நிழற்கூடம் உள்ளது. இந்த நிழற்கூடம் பாழடைந்து காணப்படுகிறது. மேலும் அங்கு மதுப்பிரியர்கள் குடித்துவிட்டு மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகளை அங்கு விட்டுவிட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் நிழற்கூடத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதன்காரணமாக வெயில் மற்றும் மழைக்காலங்களில் பயணிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த நிழற்கூடத்தை அகற்றிவிட்டு புதிய நிழற்கூடம் அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
-ராமலிங்கம், பாளையம் போடம்பட்டி.