பர்கூர் தாலுகா சிந்தகம்பள்ளியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் அலுவலகம் அருகில் கூட்டுறவு ரேஷன் கடை உள்ளது. இதற்கு சிந்தகம்பள்ளி, அண்ணா நகர், கெம்பினாயனப்பள்ளி ஆகிய பகுதிகளில் இருந்து 400-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி செல்ல வருகின்றனர். இவர்கள் வெயில் மற்றும் மழையில் நின்று பொருட்களை வாங்கும் அவல நிலையில் உள்ளனர். எனவே தாமதமின்றி ரேஷன் கடை முன்பு நிழல் தரும் வகையில் பந்தல் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ரமேஷ், பர்கூர்.