மங்கலம் நொய்யல் ஆற்றில் ஆகாயத்தாமரை அதிகமாக படர்ந்துள்ளது. இதனால் நீர் ஆற்றில் நீரோட்டம் தடைபட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுகிறார்கள். இதன் காரணமாக துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.