நாய்கள் தொல்லை

Update: 2025-02-23 12:28 GMT


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ஒன்றியம் பழவத்தான்கட்டளை ஊராட்சி பாலாஜி நகர் மற்றும் அருணா ஜகதீன் நகர், ஹரிதா நகர், சாரங்கா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெரு நாய்கள்தொல்லை அதிக அளவில் உள்ளது . இந்த நாய்கள் ஆடு, கோழிகளை கடித்து குதறி விடுகின்றன. .இதனால் அந்த பகுதி மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர், இரு சக்கர வாகனத்தில் செல்வோரை விரட்டி சென்று நாய்கள் கடிக்கின்றன. மேலும் பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள், குழந்தைகள் முதியவர்களை விரட்டிச்சென்று கடித்து விடுகின்றன.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

பொதுமக்கள்,கும்பகோணம்

மேலும் செய்திகள்