கொல்லிமலை வாசலூர்பட்டியில் உள்ள ஏரியில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவர். இந்த பகுதியில் 2 நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு நுழைவுவாயில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் மற்றொரு நுழைவு வாயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சேதமடைந்த நுழைவாயிலை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சேகர், வாசலூர்பட்டி.