நுழைவாயில் சீரமைக்கப்படுமா?

Update: 2024-12-15 16:47 GMT

சேந்தமங்கலம் அருகே உள்ள பச்சுடையாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலக நுழைவு வாயிலில் இரும்பிலான கேட் பொருத்தப்பட்டிருக்கிறது. அதனை தாங்கி பிடிக்கும் நுழைவாயில் சுவர் சேதமடைந்த உள்ளது. இதனால் அந்த சுவர், கேட் எப்போது விழுமோ? என்ற நிலையில் உள்ளது. எனவே ஒன்றிய அலுவலகத்திற்கு நாள்தோறும் வந்து செல்லும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் பாதுகாப்பு கருதி அந்த நுழைவாயில் சுவரை விரைந்து சீரமைக்க வேண்டும்.

-சேரன், சேந்தமங்கலம்.

மேலும் செய்திகள்