திறந்தவெளியில் கிணறு

Update: 2024-09-15 17:48 GMT

ஏரியூர் அருகே பத்திரஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட பூச்சூரில் பஸ் நிலைய பகுதியில் அமைந்துள்ளது கிணறு. பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட இந்த கிணறு, தற்போது பாழடைந்து உள்ளது. திறந்தவெளியில் தரைமட்ட அளவிலேயே இருப்பதால் குப்பைகள் கொட்டும் கிணறாக மாறி உள்ளது. இதனால் கிணற்று நீர் அசுத்தமாகி துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே திறந்த நிலையில் உள்ள கிணற்றுக்கு பாதுகாப்பு கம்பி வளையம் அமைக்க வேண்டும் என்பதே இந்த பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.

-ராஜா, செல்லமுடி.

மேலும் செய்திகள்