தெருநாய்கள் தொல்லை

Update: 2024-09-01 18:07 GMT

சேலம் மாவட்டம் மன்னார்பாளையம் பிரிவில் உள்ள வர்மா சிட்டியில் இருந்து காந்தி ரோடு வரை ஏராளமான தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. இந்த தெருநாய்கள் அந்த வழியாக செல்லும் மாணவர்களை துரத்தி சென்று கடிக்கின்றன. மேலும் வாகனங்களில் செல்வோரை துரத்துவதால் அவர்கள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். இந்த பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் வெளியே நடமாட முடியவில்லை. அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜூ, மன்னார்பாளையம்.


மேலும் செய்திகள்