தெருநாய்கள் தொல்லை

Update: 2024-08-11 17:04 GMT

தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட், ஆசிரியர் காலனி, மசூதி தெரு ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இப்பகுதியில் காலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்கிறது. இதனால் இந்த பகுதி வழியாக செல்பவர்களை அச்சத்துடனையே செல்கின்றனர். எனவே தெருநாய்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிரண், தர்மபுரி.

மேலும் செய்திகள்