தெருநாய்கள் தொல்லை

Update: 2024-07-28 17:34 GMT

தர்மபுரி வெண்ணாம்பட்டி ரெயில்வே கேட், டிச்சர்ஸ் காலனி, மசூதி தெரு ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இப்பகுதியில் காலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை தெருநாய்கள் துரத்தி சென்று கடிக்கின்றன. இதனால் இந்த பகுதி வழியாக மக்கள் அச்சத்துடனையே செல்கின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பிரபாகரன், தர்மபுரி.

மேலும் செய்திகள்