பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டப்படுமா?

Update: 2024-07-14 18:00 GMT

பென்னாகரம் அருகே உள்ள குள்ளாத்திரம்பட்டி புதூரில் ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சுற்றுச்சுவர் நீண்ட நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் பள்ளி வளாகத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் மதுப்பிரியர்கள் சிலர் பள்ளி வளாகத்தில் அமர்ந்து மது குடிக்கின்றனர். எனவே பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செந்தில், பென்னாகரம்.

மேலும் செய்திகள்