விழுந்து கிடக்கும் மரம் அகற்றப்படுமா?

Update: 2024-07-07 12:00 GMT

பேரூர் பச்சாபாளையம் பிரிவு ஆவின் பால் பண்ணை அருகே பழமையான வேப்ப மரம் இருந்தது. சாலையோரம் இருந்த அந்த வேப்ப மரம் சூறாவளி காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்தது. இது சாைலயை ஒட்டி விழுந்து கிடக்கிறது. நீண்ட நாட்கள் ஆகியும் அந்த மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட துறையினர் முன்வரவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே அந்த மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்