தெருநாய்கள் தொல்லை

Update: 2024-06-30 11:52 GMT

கோவையை அடுத்த பட்டணம் பகுதியில் தெருநாய்கள் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை சாலைகளில் கூட்டம், கூட்டமாக உலா வருகின்றன. அப்போது அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளை துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. மேலும் குழந்தைகளை வெளியே விளையாட அனுப்ப முடியவில்லை. அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்