போலீசார் கண்காணிப்பார்களா?

Update: 2024-06-09 18:10 GMT

சேலம் மாவட்டம் இளம்பிள்ளை காந்தி நகரில் நாகர்கோவில் எதிர்வீதியில் கார் நிறுத்தும் இடம் உள்ளது. இந்த பகுதியில் இரவு நேரங்களில் சிலர் மது அருந்திவிட்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். மேலும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்கள் அடிக்கடி நடக்கிறது. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதி வழியாக செல்ல பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், இளம்பிள்ளை.

மேலும் செய்திகள்