பூட்டியே கிடக்கும் நூலகம்

Update: 2024-06-09 16:28 GMT

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அத்திமுட்லு ஊராட்சிக்குட்பட்ட அகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அண்ணா மறுமலர்ச்சி நூலகம் கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட இந்த நூலகம் தற்போது புதுபிக்கும் பணி முடித்தும் பூட்டியே கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நூலகத்தை திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

-கதிர்வேல், அகரம்.

மேலும் செய்திகள்