உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்படுமா?

Update: 2024-06-02 10:39 GMT

பொள்ளாச்சி-திருப்பூர் சாலையில் கரப்பாடி பிரிவு உள்ளது. இங்குள்ள நால்ரோடு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் கரப்பாடி பிரிவில் உயர் கோபுர மின் விளக்கு இல்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. மேலும் அந்த வழியாக வரும் வாகனங்கள் விபத்தில் சிக்கி வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்கு உயர் கோபுர மின் விளக்கு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்