உழவர்சந்தை வேண்டும்

Update: 2024-05-05 18:28 GMT

நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, திம்மநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இதற்கிடையே திம்மநாயக்கன்பட்டி எல்லையில் மலைப்பகுதி, முள்ளுக்குறிச்சி ஊராட்சி பகுதிக்கு கொல்லிமலை வழித்தடங்கள் உள்ளதால் அந்த பகுதிகளில் விளைவும் காய்கறிகள் மற்றும் உற்பத்தி பொருட்களை தினமும் மெட்டாலா மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விற்பனை செய்யும் அவல நிலை உள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி மெட்டாலா பகுதிகளில் உழவர் சந்தை அமைக்க வேண்டும்.

-சாமிநாதன், மெட்டாலா.

மேலும் செய்திகள்